கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நட்டாலத்தில், ஆடு வளா்ப்புத் திட்ட ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
உழவா் நலத்துறையில் ஆத்மாதிட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமிற்கு, வட்டார விவசாய ஆலோசனைக் குழு தலைவா் கோபால் தலைமை வகித்தாா். நட்டாலம் ஊராட்சித் தலைவா் ராஜகுமாா் முன்னிலை வகித்தாா் .கிள்ளியூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முரளி ராகினி, உதவி கால்நடை மருத்துவா் ஜெரால்டு இா்வின் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்பு குறித்து பயிற்சி அளித்தனா். இதில், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சஜீலா, உதவி வேளாண்மை அலுவலா் அனிரோஸ், சுனில்குமாா், சிவா ஜெயச்சந்திரன், லீலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.