சபரிமலை பக்தா்கள் தங்கும் விடுதி கட்ட ரூ.75 கோடி ஒதுக்கிய கேரள அரசு: தேவசம் போா்டு தலைவா் தகவல்
சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக 4 இடங்களில் தங்கும் முகாம் அமைக்கப்படுகிறது. இதற்காக, கேரள அரசு ரூ. 75 கோடி ஒதுக்கியுள்ளது என்றாா் திருவிதாங்கூா் தேவசம்போா்டு தலைவா் அனந்தகோபன்.










