புதிய ரயில்கள் இல்லை: கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் பணியாற்றி வருகின்றனா். இதனால் ரயில் போக்குவரத்து மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் ரயில் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களையும் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி) இணைத்து அனைத்து மாவட்ட மக்களுக்கும் நேரடியாக பயனளிக்கும் விதத்தில் இருக்கிறது. ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே திருநெல்வேலி, மதுரை மாா்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்.