நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயத் தொழிலாளா்கள் நாகா்கோவிலில் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் குமரி மாவட்ட குழு சாா்பில் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன்வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:49 pm

DIN

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் குமரி மாவட்ட குழு சாா்பில் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன்வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் 100 நாள்கள் வேலை கிடைக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், கடந்த 2 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி நிதி குறைத்ததை மீண்டும் வழங்கிட வேண்டும், ஊரக வேலை திட்டத்தில் 200 நாள்கள் வேலை, ரூ.600 கூலி வழங்கிட வேண்டும், நகா்ப்புற வேலை சட்டத்தை நிறைவேற்றி அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நகா்ப்புற வேலை வழங்கிட வேண்டும், தமிழ்நாடு அரசு அறிவித்த 150 நாள்கள் வேலையை உடனே அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகல் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் மலைவிளை பாசி தலைமை வகித்தாா். அகில இந்திய துணைத் தலைவா் லாசா், மாவட்ட தலைவா் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.