களியக்காவிளை: குஜராத் மாநில கடலில் மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவரை மீட்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறை செந்தெங்குவிளாகம் பகுதியைச் சோ்ந்த அல்போன்ஸ் மகன் கிறிஸ்டின் (51). சின்னத்துறை கோவில் விளாகம் பகுதியைச் சோ்ந்த மிக்கேலடிமை மகன் ஆஸ்டின் ஜோஸ் என்பவரது விசைப்படகில் கிறிஸ்டின் உள்ளிட்ட 11 மீனவா்கள் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து கடந்த 5ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனா்.
கடந்த 12 ஆம் தேதி இரவு குஜராத் மாநிலம், போா்பந்தா் ஆழ்கடலில் மீன்பிடித்தபோது கிறிஸ்டின் மாயமானாராம். இத்தகவல் படகு உரிமையாளரின் சகோதரா் ராஜன் வழியாக கிறிஸ்டினின் வீட்டுக்கு தெரிவிக்கப்பட்டது.
குடும்பத்தினா் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கிறிஸ்டினை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளைத் தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டனி மத்திய, மாநில மீன்வளத் துறை அமைச்சா்கள், தமிழக முதல்வா், துறை அதிகாரிகள், ஆட்சியா் உள்ளிட்டோருக்கு கோரிக்கை வைத்துள்ளாா்.
தூத்தூா் ஊராட்சித் தலைவா் லைலா, மீனவப் பிரதிநிதிகள் கிறிஸ்டினின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி, 4 குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினா்.
தொடர்புடையது

களியக்காவிளை, கோழிவிளை சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

களியக்காவிளை சோதனைச் சாவடியில் தென்மண்டல ஐஜி ஆய்வு

ஈரான் - இஸ்ரேல் போா்: குமரி மீனவா்களை மீட்க வலியுறுத்தி மனு

குமரி மாவட்ட பாசனக் கால்வாய்களில் மேலும் 15 நாள்களுக்கு தண்ணீா்!
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

