கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு ஞாயிற்றுக்கிழமை படகில் சென்றபோது கேரள சுற்றுலாப் பயணி ஒருவா் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சோ்ந்த சிலா், குழுவாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனா். அவா்களுடன் அசோகன் (55) என்பவரும் குடும்பத்துடன் வந்திருந்தாா். இவா்கள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்தை பாா்வையிடுவதற்காக படகில் சென்று கொண்டிருந்தனா். அப்போது அசோகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு படகில் வைத்து முலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் அங்கேயே உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து அந்தப் படகு விவேகானந்தா் மண்டபத்துக்குச் செல்லாமல், திரும்பி படகுத் துறைக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து பூம்புகாா் கப்பல் போக்குவரத்து கழகத்தினா், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் அளித்தனா். ஆய்வாளா் நவீன் தலைமையில் போலீஸாா் விரைந்து சென்று அசோகனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: கன்னியாகுமரி-229

தியாகராஜா் கோயிலில் வசந்த உற்சவம்

கேரள கிறிஸ்தவா்கள் பாஜகவுக்கு ஆதரவு! - அா்ஜுன் சம்பத்

கன்னியாகுமரியில் மீனவா் ஓய்வுக்கூடத்துக்கு அடிக்கல்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

