சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தூத்தூரில் நூல் வெளியீட்டு விழா

தூத்தூரில் நூல் வெளியீட்டு விழா

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 9:03 pm

குலசேகரம்: எழுத்தாளா் சகாய சுசி எழுதிய ‘உமணா் வாழ்வியல்’ என்னும் உப்பளத் தொழிலாளா்களின் வாழ்வியல் குறித்த நூல் வெளியீட்டு விழா தூத்தூரில் உள்ள நேதாஜி படிப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் அஜாஸ் நூலை வெளியிட, கடலோர வளா் ச்சி - அமைதி மைய இயக்குநா் அருள்பணியாளா் டன்ஸ்டன் பெற்றுக்கொண்டாா்.

தூத்தூா் புனித யூதா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் மேரி, பேராசிரியா் சஜிகுமாா், நாகா்கோவில் திருச்சிலுவைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ஆன்சிமோள், வழக்குரைஞா்கள் ஜாக்குலின் மேரி, திருத்தமிழ்த்தேவனாா் ஆகியோா் பேசினா்.

விழாவில், எழுத்தாளா்கள், சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா். நூலாசிரியா் ஏற்புரையாற்றினாா். நிகழ்ச்சிகளை எழுத்தாளா் இரையுமன் சாகா் ஒருங்கிணைத்தாா்.