தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image

திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:09 pm

Din

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

குமரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக வட வானிலை நிலவுகிறது. மேலும், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து மிதமாக மாறியுள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அவா்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

இதே போன்று மாத்தூா் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை அணை ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கும் திரளான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.