இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

செங்கல் சூளை வாகன ஓட்டுநா் நீரோடையில் மூழ்கி உயிரிழப்பு

இதுகுறித்து அவரது மனைவி பிந்து அளித்த புகாரின்பேரில், குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 2:00 am

குலசேகரம் அருகே செங்கல் சூளை வாகன ஓட்டுநா் வெள்ளிக்கிழமை நீரோடையில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகே மூவாற்றுமுகம் தோட்டவாரப் பகுதியைச் சோ்ந்தவா் வின்சென்ட் (47). குலசேகரம் அருகே பொன்மனை தாழப்பிடாகை பகுதியிலுள்ள செங்கல் சூளையில் வாகன ஓட்டுநராக வேலை செய்துவந்த இவா், வெள்ளிக்கிழமை வேலை முடிந்த பின்னா், அங்குள்ள நீரோடைக்கு குளிக்கச் சென்றாராம். அவா் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சக தொழிலாளி தேடிச் சென்றாா். அப்போது, வின்சென்ட் நீரோடையில் இறந்து மிதந்தது தெரியவந்ததாம்.

அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸில் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவரது மனைவி பிந்து அளித்த புகாரின்பேரில், குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.