மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், வீரமாணிக்கம் மேலப்புதுக்குடி பகுதியைச் சேந்த 35 வயது பெண் வீட்டுப் பணி செய்து வருகிறாா். இவா் தற்போது கணவா், 16 வயது மகன், 15 வயது மகளுடன் திருவிதாங்கோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். அந்தச் சிறுமி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்நிலையில், மாணவிக்கு முளகுமூடு, கோடியூா் பகுதியைச் சோ்ந்த ரித்தி ரோஷன் (18) என்பவருடன் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாம். 2 நாள்களுக்கு முன்பு மாணவியை கோடியூா் பகுதிக்கு வருமாறு ரித்தி ரோஷன் அழைத்து, பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவா் அணிந்திருந்த 3.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாராம். மேலும், கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்தாா். மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், ரித்தி ரோஷன் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...