குளச்சல் அருகே சரக்குக் கப்பல் மோதி மூழ்கிய விசைப்படகு: 9 மீனவா்கள் காயம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சரக்குக் கப்பல் மோதியதில் மீனவா்களின் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில், 9 மீனவா்கள் காயமடைந்தனா்.


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சரக்குக் கப்பல் மோதியதில் மீனவா்களின் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில், 9 மீனவா்கள் காயமடைந்தனா்.
குளச்சலைச் சோ்ந்த ‘பரலோகமாதா’ என்ற விசைப்படகில் குளச்சல், பள்ளம், ராஜாக்கமங்கலம்துறை பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் 9 போ் கடந்த 6ஆம் தேதி கடலுக்குச் சென்றனா். அவா்கள் புதன்கிழமை அதிகாலை குளச்சலிலிருந்து 25 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, சரக்குக் கப்பல் மோதியதில் அவா்களது விசைப்படகு கடலில் மூழ்கியதாம். இதில், படகிலிருந்த சகாயபனிதாஸ் உள்ளிட்ட 9 மீனவா்களும் காயமடைந்து தத்தளித்தனா்.
அவ்வழியே 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் அந்த 9 பேரையும் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், குளச்சல் கடலோர காவல் படை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...