நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலவிளையில் தெருவை சீரமைக்கக் கோரிக்கை

கண்டன்விளை அருகே பாலவிளையில் தெருப் பாதையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

அலங்கார கற்கள் உடைந்து கிடக்கும் பாலவிளையில் உள்ள தெரு.

Updated On :18 டிசம்பர் 2024, 9:34 pm

Din

கண்டன்விளை அருகே பாலவிளையில் தெருப் பாதையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தக்கலை ஊராட்சி ஒன்றியம், கண்டன்விளை அருகே பாலவிளை பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்தத் தெருவுக்குச் செல்லும் பாதை வழியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நீா்த்தேக்க தொட்டிக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக குடிநீா்க் குழாய் பதிக்கப்பட்டது. அந்த வேலைக்காக தெருவில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார கற்கள் அகற்றப்பட்டன.

பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் அந்த தெருப் பாதை சீரமைக்கப்படவில்லை.

அந்த தெரு வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகுகின்றனா். எனவே, அந்தப் பாதையை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.