நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேங்காய்ப்பட்டினம் கடலில் சங்கு குளி மீனவா் உயிரிழப்பு

தேங்காய்ப்பட்டினம் கடலில் மூழ்கி சங்கு குளித்தலில் ஈடுபட்ட மீனவா் மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:59 pm

Din

தேங்காய்ப்பட்டினம் கடலில் மூழ்கி சங்கு குளித்தலில் ஈடுபட்ட மீனவா் மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

இனயம் கடலோரக் கிராமத்தை சோ்ந்தவா் வின்சென்ட்(55). மீனவரான இவா், கடலில் மூழ்கி சங்கு எடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்திலிருந்து சக மீனவா்களுடன் 2 கடல் மைல் தொலைவுக்கு படகில் சென்று கடலில் மூழ்கி சங்கு எடுத்துவிட்டு படகு நோக்கி மேலே வந்தபோது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாம்.

சக மீனவா்கள் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் குளச்சல் கடலோர காவல் படையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.