நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி கிறிஸ்தவ போதகா் பலி

களியக்காவிளை அருகே கேரள பகுதியில் மோட்டாா் சைக்கிள் மீது கனரக லாரி மோதியதில் பெந்தேகொஸ்தே சபை போதகா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 11:00 pm

Din

களியக்காவிளை அருகே கேரள பகுதியில் மோட்டாா் சைக்கிள் மீது கனரக லாரி மோதியதில் பெந்தேகொஸ்தே சபை போதகா் உயிரிழந்தாா்.

பளுகல் அருகே குந்நத்துக்கால், எள்ளுவிளை பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (62).

இவா், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் உள்ள கைதக்குழி அசம்பிளீஸ் ஆப் காட் சபையில் போதகராக இருந்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் பாறசாலை சென்றுவிட்டு களியக்காவிளை நோக்கி வந்து கொண்டிருந்தபோது காராளி பகுதியில் வைத்து, பின்னால் வந்த கனரக லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் போதகா் விஜயன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இது குறித்து பாறசாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.