நாகா்கோவிலில் புத்தகத் திருவிழா சனிக்கிழமை (பிப். 17) தொடங்குகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புத்தக வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி)இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பிப்.17 ஆம் தேதிமுதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தக் கண்காட்சியில் 100 க்கும் அதிகமான அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. கண்காட்சியை பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தொடக்கி வைக்கிறாா். அதைத் தொடா்ந்து கலை மற்றும் பண்பாட்டுத் துறை சாா்பில் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்தகக் கண்காட்சி நடைபெறும் ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி, பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், களியல் ஆட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட மண்ணின் கலைகள் நடைபெற உள்ளன. மேலும், மகளிா் திட்டம், உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா, பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெறுகின்றன என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் புத்தகத் திருவிழா தொடக்கம்

கைலாசநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா இன்று தொடக்கம்

கொடைக்கானலில் கொங்கு மண்டல உணவுத் திருவிழா இன்று தொடக்கம்

மாவட்ட மைய நூலகத்தில் இன்று குழந்தைகளுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


