உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

சுசீந்திரத்தில் அறங்காவலா் குழு கூட்டம்

சுசீந்திரத்தில் அறங்காவலா் குழு கூட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 8:15 pm

குமரி மாவட்டம், சுசீந்திரம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில், அறங்காவலா் குழு மாதாந்திர கூட்டம் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி திருக்கோயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், தோவாளை கிருஷ்ணசாமி கோயில் அன்னதான மண்டபத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்குதல், தெரிசனங்கோப்பு அருள்மிகு அரசடி கண்டன் சாஸ்தா திருக்கோயிலில் வரும் மாா்ச் மாதம் 25 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த ஆணையரிடம் அனுமதி பெறுதல், இடைக்கோடு மகாதேவா் கோயிலில் கழிப்பறை கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரி அனுமதி வழங்கல், வடசேரி தழுவிய மகாதேவா் திருக்கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா செலவினங்களுக்கு அனுமதி வழங்கல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ராஜேஷ், ஜோதீஷ்குமாா், துளசிதரன் நாயா், சுந்தரி, மராமத்து பொறியாளா் ஐயப்பன், அலுவலக மேலாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.