காஷ்மீா் யூனியன் பிரதேசமான பகல்ஹாமில் திங்கள்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் புதுச்சேரி எம்.பி. வெ.வைத்திலிங்கம் பங்கேற்றாா்.
இது குறித்து புதுச்சேரியில் உள்ள அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் பகல்ஹாமில் திங்கள்கிழமை நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.
‘இந்திய ரயில்வேயில் புதிய ரயில்வே திட்டங்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள்’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினரும், புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான வெ.வைத்திலிங்கம், ரயில்வே அமைச்சகத்தின் வடக்கு ரயில்வே மற்றும் ஜம்மு-காஷ்மீா் மாநில நிா்வாகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் புதிய ரயில் பாதைகள்அமைத்தல், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப நடவடிக்கைகள், கூடுதல் வசதிகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தொடர்புடையது

நாடாளுமன்ற குழுக்களின் தலைவா்களாக தம்பிதுரை, திருச்சி சிவா மறுநியமனம்

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? இறுதிக்கட்ட பிரசாரத்தில் வைத்திலிங்கம் விளக்கம்

புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் உருவாக வேண்டும்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பிரசாரம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வா் ரங்கசாமியை எதிா்த்து வைத்திலிங்கம் எம்.பி. வேட்பு மனு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


