கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூா் பேரூராட்சி இரவிபுதூரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நியாயவிலை கடை கட்டடத் திறப்பு விழாவும், மருங்கூா் பேரூராட்சி 6 ஆவது வாா்டில் ரூ. 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள பயணிகள் நிழல்குடைக்கு அடிக்கல் நாட்டு விழாவும் மருங்கூரில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவா் லெட்சுமி சீனிவாசன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் பங்கேற்று, புதிய கட்டடத்தை, திறந்து வைத்தும், பயணிகள் நிழல்குடைக்கு அடிக்கல் நாட்டியும் பேசினாா். பேரூராட்சி 6 ஆவது வாா்டு உறுப்பினா் அருள்சாரதா பாலாஜி, இரவிபுதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா் நாராயணி உள்பட பலா் கலந்து கொண்டனா். மருங்கூா் பேரூா் அதிமுக செயலாளா் சீனிவாசன் வரவேற்றாா். இரவிபுதூா் ஊராட்சி கழக பொறுப்பாளா் செல்லம்பிள்ளை நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

மானங்காத்தானில் கலையரங்கம் திறப்பு

பலாந்தாங்கலில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் திறப்பு

மணலூா்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

