திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கருங்கல் அருகேபாலூா் குளத்தை தூா்வாரக் கோரிக்கை

கருங்கல் அருகே பாலூா் குளத்தைத் தூா்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

கருங்கல் அருகே பாலூா் குளத்தைத் தூா்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளா்.

திப்பிரமலை ஊராட்சிக்குள்பட்ட பாலூா் குளம் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குளத்தை பல ஆண்டுகளாக முறையாக தூா்வாராததால் புல், புதா்கள் நிரம்பி, பாசி படா்ந்து தூா்ந்து காணப்படுகிறது. இதனால், இக்குளத்தில் மழைக்காலங்களில் மழைநீா், பட்டணங்கால் சானல் தண்ணீா் தேங்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, இக்குளத்து நீரைப் பயன்படுத்தி பாலூா், மாங்கரை, கல்லுவிளை, ஏலா பகுதிகளில் விவசாயிகள் வாழை, தென்னை, பயறு வகைகள் பயிரிட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் பாலூா் குளத்தைத் தூா்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.