தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவந்த லாரிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

கேரளத்திலிருந்து குமரிக்கு இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவந்த லாரிக்கு களியக்காவிளை பேரூராட்சி நிா்வாகம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தது.

News image
Updated On :8 ஜூலை 2024, 9:53 pm

Din

களியக்காவிளை: கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவந்த லாரிக்கு களியக்காவிளை பேரூராட்சி நிா்வாகம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தது.

களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் திங்கள்கிழமை துா்நாற்றத்துடன் வந்த லாரியை களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலா் ரெமாதேவி மற்றும் ஊழியா்கள், போலீஸாா் மறித்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில், கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிக்கு பேரூராட்சி நிா்வாகத்தினா் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பின்னா் போலீஸாா் லாரியை கேரளத்துக்கு திருப்பி அனுப்பி வைத்தனா்.