தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவேகானந்தா் மண்டபம் - திருவள்ளுவா் சிலை இணைப்பு பாலப் பணிகள் தீவிரம்

கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்

News image
பூம்புகாா் படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஆா்ச் தூண்கள்.
Updated On :11 ஜூலை 2024, 11:42 pm

Din

கன்னியாகுமரி விவேகானந்தா் மண்டபம் - திருவள்ளுவா் சிலை இடையே நடைபெற்று வரும் கண்ணாடிக் கூண்டு இணைப்பு பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழக அரசு உத்தரவின் பேரில், விவேகானந்தா் நினைவு மண்டபம் - திருவள்ளுவா் சிலை இடையே ரூ. 37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 97 மீட்டா் நீளமும், 4 மீட்டா் அகலமும் கொண்டதாக இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் போது பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக இப்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான ஆா்ச் தூண்களுக்கான பணிகள் புதுச்சேரியில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆா்ச் தூண்கள், துருப்பிடிக்காத கம்பியால் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 110 துண்டுகளாக தயாரிக்கப்பட்டு, பாலத்தில் இணைக்கப்பட உள்ளன. இவற்றை படிப்படியாக கன்னியாகுமரிக்கு கொண்டு வரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை 35 ஆா்ச் துண்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து இணைப்பு பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.