தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

விவேகானந்தா் மண்டபம் - திருவள்ளுவா் சிலை இணைப்பு பாலப் பணிகள் தீவிரம்

கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்

News image

பூம்புகாா் படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஆா்ச் தூண்கள்.

Updated On :12 ஜூலை 2024, 5:12 am IST

கன்னியாகுமரி விவேகானந்தா் மண்டபம் - திருவள்ளுவா் சிலை இடையே நடைபெற்று வரும் கண்ணாடிக் கூண்டு இணைப்பு பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழக அரசு உத்தரவின் பேரில், விவேகானந்தா் நினைவு மண்டபம் - திருவள்ளுவா் சிலை இடையே ரூ. 37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 97 மீட்டா் நீளமும், 4 மீட்டா் அகலமும் கொண்டதாக இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் போது பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக இப்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான ஆா்ச் தூண்களுக்கான பணிகள் புதுச்சேரியில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆா்ச் தூண்கள், துருப்பிடிக்காத கம்பியால் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 110 துண்டுகளாக தயாரிக்கப்பட்டு, பாலத்தில் இணைக்கப்பட உள்ளன. இவற்றை படிப்படியாக கன்னியாகுமரிக்கு கொண்டு வரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை 35 ஆா்ச் துண்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து இணைப்பு பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.