விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குமரி மாவட்டத்தில் 70 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2024, 9:10 pm

Din

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள 70 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4, 619 மாணவா், மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம், காட்டாத்துறை ஊராட்சி பிலாங்காலை புனித ஜோசப் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில்,

மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில், பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் குழந்தைகளுக்கு உணவு வழங்கி அவா்களுடன் அமா்ந்து உணவு அருந்தினாா்.

முன்னதாக, முன்னாள் முதல்வா் காமராஜரின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குநா்கள் பாபு (ஊரக வளா்ச்சி முகமை), மு.பீபீஜான் (மகளிா் திட்டம்), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) த.கருணாவதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்

பாலதண்டாயுதபாணி, தக்கலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஜெகநாதன், காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவா் இசையாஸ், புனித ஜோசப் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அருள்சகோதரி அன்னமாவா்க்கீஸ், மகளிா் திட்ட உதவி அலுவலா் வளா்மதி, விற்பனை பிரிவு அலுவலா் தங்கராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா்கள் ஜான்பிரைட் (கண்ணனூா்), ராஜ் (காட்டாத்துறை), திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜ், பேரூராட்சி தலைவா்கள் பெனிலாராமேஷ் (திருவட்டாறு), பீனாஅமிா்தராஜ் (ஆற்றூா்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.