விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முள்ளங்கினாவிளை பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்

முள்ளங்கினாவிளை புனித அந்தோணியாா் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

News image
முள்ளங்கினாவிளை புனித அந்தோணியாா் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறாா் கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா்.
Updated On :15 ஜூலை 2024, 8:50 pm

Din

கருங்கல்: கருங்கல் அருகே உள்ள முள்ளங்கினாவிளை புனித அந்தோணியாா் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முள்ளங்கினாவிளை புனித அந்தோணியாா் தொடக்கப் பள்ளியில் இந்தத் திட்டத்தை தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும் கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ராஜேஷ் குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

கிள்ளியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அஜிதா, முள்ளங்கினாவிளை ஊராட்சித் தலைவா் பிரபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜோபி, ஒன்றியக் குழு உறுப்பினா் மேரி ஸ்டெல்லா மற்றும் அருள்சகோதரிகள், ஆசிரியைகள், மாணவா்கள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.