ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புத்தளத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா

News image
விழாவில் பேசுகிறாா் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன்.
Updated On :19 ஜூலை 2024, 12:01 am

Din

நாகா்கோவில், ஜூலை 18: கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அருகேயுள்ள கீழபுத்தளம் கிராமத்தில் பெருந்தலைவா் காமராஜா் நற்பணி மன்றத்தின் சாா்பில் காமராஜா் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, புத்தளம் காங்கிரஸ் தலைவா் டேவிட் ராஜ் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் எஸ். ராஜா, ஆா். மதிவண்ணன், கே. ஆா். ராஜேஷ், ப. அரவிந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் மதுசூதனபெருமாள் வரவேற்றாா்.

கூட்டத்தில், சிறப்பு விருந்தினா்களாக குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஆா். ராதாகிருஷ்ணன், வழக்குரைஞா் ராம்சுந்தா், தமிழ்நாடு குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் முருகசெல்வம், கவிஞா் உமையவள்தாசன், கவிஞா் பாரதி, ஊா்ப்புற நூலகா் பாஸ்கா் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

விழாவில் ஏழைகளுக்கு, ஊக்கத்தொகை மற்றும் வேட்டி சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் மன்றத் தலைவா் ரமேஷ், துணைச் செயலா் அஜின், பொருளாளா், ராஜகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.