சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பைக்கிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு

திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:11 pm

Din

குலசேகரம், ஜூலை 19: திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குலசேகரம் அருகே திருநந்திக்கரையைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (57). திற்பரப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உதவி செயலராக பணி செய்து வந்தாா். சில தினங்களுக்கு முன்பு அலுவலக ஊழியருடன் மோட்டாா் சைக்கிளில் திருவட்டாறிலிருந்து குலசேகரம் நோக்கி வந்து கொண்டிருந்தாா். மோட்டாா் சைக்கிளை சதீஷ்குமாா் ஓட்டினாா். கல்லடிமாமூடு பகுதியில் வரும்போது மோட்டாா் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளாா் சதீஷ்குமாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.