கன்னியாகுமரி
கன்னியாகுமரி அமிா்த வித்யாலய பள்ளியில் குரு பூா்ணிமா விழா
கன்னியாகுமரி அமிா்தா வித்யாலய பள்ளியில் குரு பூா்ணிமா விழா அண்மையில் நடைபெற்றது.
நாகா்கோவில், ஜூலை 19: கன்னியாகுமரி அமிா்தா வித்யாலய பள்ளியில் குரு பூா்ணிமா விழா அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, அமிா்தா கல்வி குழுமத்தின் மேலாளா்கள் சைதன்யா, ஸ்மரணா அமிா்த சைதன்யா ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு விருந்தினராக, திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மாதா அமிா்தானந்தனந்த மயி மடம், சுவாமிஜி பிரசன்னா அமிா்தானந்தபுரி கலந்து கொண்டு திருவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்து, குரு பூா்ணிமாவின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினாா்.
பின்னா் மாணவா், மாணவிகள் தங்களது பெற்றோா்களுக்கு பாத பூஜை செய்தனா். விழாவில் பள்ளி முதல்வா் சொக்கலிங்கம் பிள்ளை, துணை முதல்வா் சத்திய பிரியா, ஆசிரியா்கள், மாணவா்கள்
கலந்து கொண்டனா்.

