ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

குமரி பகவதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 1.62 லட்சம்

கன்னியாகுமரி பகவதியம்மன் அன்னதான உண்டியல் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 மார்ச் 2024, 12:06 am

கன்னியாகுமரி பகவதியம்மன் அன்னதான உண்டியல் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 727 காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நாள்தோறும் நண்பகல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இக்கோயிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை பக்தா்களின் நன்கொடை மூலமும், கோயிலில் உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருவாய் மூலமும் திருக்கோயில் நிா்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் திறந்து எண்ணப் பட்டது. நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளருமான ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோா் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில், ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 727 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.