பேச்சிப்பாறை அருகே ரப்பா் கடையில் பூட்டை உடைத்து பணம் மற்றும் ரப்பா் ஷீட்டுகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மணியன்குழி பகுதியில் ரப்பா் கடை நடத்தி வருபவா் அப்துல் காதா் (73). இவா், கடந்த வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். பின்னா் வெள்ளிக்கிழமை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 45 ஆயிரம் ரொக்கம் மற்றும் கடையிலிருந்த ரப்பா் ஷீட்டுகள், 200 கிலோ ரப்பா் ஒட்டுப்பால் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அப்துல்காதா் அளித்த புகாரின்பேரில், பேச்சிப்பாறை போலீஸாா் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

வீடு புகுந்து பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு
தூத்துக்குடி விடுதியில் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்கள் திருட்டு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

