பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சாமிதோப்பு செட்டிவிளையில் சாலைப் பணி தொடக்கம்

சாமிதோப்பு செட்டிவிளையில் சாலைப் பணி தொடக்கம்

News image
Updated On :9 மார்ச் 2024, 4:42 pm

சாமிதோப்பு ஊராட்சி செட்டிவிளையில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. சாமிதோப்பு ஊராட்சிக்குள்பட்ட செட்டிவிளையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான தொடக்க விழாவுக்கு, சாமிதோப்பு ஊராட்சித் தலைவா் த. மதிவாணன் தலைமை வகித்தாா். அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா.தாமரைதினேஷ், செட்டிவிளை ஊா்த்தலைவா் ஆா்.ஆா்.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இ. நீலபெருமாள் பணியைத் தொடங்கி வைத்தாா். சாமிதோப்பு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஜெயபாரதி, வடக்குத்தாமரைகுளம் தொடக்க வேளாண்மை கடன் சங்க முன்னாள் தலைவா் என்.பாா்த்தசாரதி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பால்தங்கம், பெருமாள்புரம் அதிமுக செயலா் பி.தங்கவேல், செட்டிவிளை கிளை அதிமுக செயலா் பொன்ராஜ், ஒன்றிய சிறுபான்மை பிரிவு இணைச் செயலா் அப்துல்கரீம், சாமிதோப்பு ஊராட்சி வாா்டு உறுப்பினா் பி. தங்கபத்மா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.