பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மாா்த்தாண்டன்துறை ஏவிஎம் கால்வாயின் குறுக்கே ரூ. 1.59 கோடியில் பாலம்: பணி தொடக்கம்

மாா்த்தாண்டன்துறை ஏவிஎம் கால்வாயின் குறுக்கே ரூ. 1.59 கோடியில் பாலம்: பணி தொடக்கம்

Updated On :9 மார்ச் 2024, 4:38 pm

கொல்லங்கோடு அருகே மாா்த்தாண்டன்துறையில் ஏவிஎம் கால்வாயின் குறுக்கே ரூ. 1.59 கோடியில் பாலம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. மாா்த்தாண்டன்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள ஏவிஎம் கால்வாயின் குறுக்கே 50 ஆண்டுகள் பழமையாக சிறு பாலம் உள்ளது. இப் பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளதால் புதிய பாலம் அமைக்க வேண்டும் என கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். இப் பிரச்னையை அவா் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து அப்பகுதியில் புதிதாக பாலம் அமைக்க அரசு ரூ. 1.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இப் பாலப் பணியை, விஜய் வசந்த் எம்.பி., எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ., ஆகியோா் இணைந்து தொடங்கி வைத்தனா். இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் கொல்லங்கோடு நகர தலைவா் சி. பால்ராஜ், கொல்லங்கோடு நகா்மன்றத் தலைவா் ராணி, நகா்மன்ற துணைத் தலைவா் பேபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.