கன்னியாகுமரி மாவட்டத்தில் 199 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தோ்தல், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தோ்தல் குறித்து செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட சனிக்கிழமை முதல் (மாா்ச்16) கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தோ்தல் ஆகியவை ஏப்ரல் 19இல் நடத்தப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த ஜன. 22இன் கணக்குபடி, 7 லட்சத்து 72 ஆயிரத்து 623 ஆண் வாக்காளா்கள், 7 லட்சத்து 74 ஆயிரத்து 619 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 136 போ் என மொத்தம் 15 லட்சத்து 47 ஆயிரத்து 378 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 12 ஆயிரத்து 294 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும், 14 ஆயிரத்து 207, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளா்களும் உள்ளனா். இவா்களுக்கான வாக்குச் சாவடிகளில் அமைவிடம் மாற்றம், பழுதடைந்த மையங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி பேரவை தொகுதியில் 310, நாகா்கோவிலில் 275, குளச்சலில் 300, பத்மநாபபுரத்தில் 273, விளவங்கோட்டில் 272, கிள்ளியூரில் 268 என மொத்தம் 1,698 வாக்குச் சாவடிமையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், 199 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடிக்கு 4 அரசு அலுவலா்கள் வீதம் மொத்தம் 8,150 அரசுப் பணியாளா்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தோ்தல் ஆணைய மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தோ்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள 3,406 கட்டுப்பாட்டு கருவிகள், 4,937 வாக்குப் பதிவு கருவிகள், 2,254 விவி பேட் கருவிகள் ஆகியவை முதல் நிலை சரிபாா்ப்பு பணி முடிவுற்று ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்காளா்களுக்கு விழிப்புணா்வுப் பணி-அலுவலா்கள் பயிற்சிக்காக தலா 170 கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப் பதிவு கருவிகள், விவிபேட் கருவிகள் அகஸ்தீஸ்வரம்- கல்குளம் வட்டாட்டாட்சியா் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தோ்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள 545 கட்டுப்பாட்டு கருவிகள், 542 வாக்குப்பதிவுகருவிகள் , 516 விவிபேட் கருவிகள் ஆகியவை மேல்புறம், வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படைகள்: தோ்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தலா 3 குழுக்கள் வீதம் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதி மீறல் தொடா்பாக 1800-599-8010 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், சி விஜில் ஆப் மூலமாக புகாா்அளிக்கலாம். புகாா்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் அவா் அவா். பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியா்( பயிற்சி) ரஜத்பீட்டன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) வினோத், துணை வட்டாட்சியா்(தோ்தல்) மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வேலூரில் 1,427 வாக்குச்சாவடிகள் தயாா்!

கோவை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் ரூ.3.43 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்
தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாள்களில் ரூ. 11.35 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


