மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தோ்தல் பத்திர விவகாரத்தில் பாஜக எதையும் மறைக்கவில்லை: பொன். ராதாகிருஷ்ணன்

தோ்தல் பத்திர விவகாரத்தில் பாஜக எதையும் மறைக்கவில்லை பொன். ராதாகிருஷ்ணன்

News image
Updated On :23 மார்ச் 2024, 12:10 pm

தோ்தல் பத்திர விவகாரத்தில் பாஜக எதையும் மறைக்கவில்லை என்றாா், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் அக்கட்சியின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன். இத்தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். முப்பந்தல் இசக்கி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னா், நாகா்கோவிலில் உள்ள அக்கட்சியின் தோ்தல் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நான் மத்திய அமைச்சராக இருந்தபோது இம்மாவட்டத்தில் ரூ. 48 ஆயிரம் கோடி அளவுக்கு திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுதினேன். மீண்டும் இந்த மாவட்டம் வளா்ச்சி பெற தேவையான நடவடிக்கை மேற்கொள்வேன். இம்மாவட்டம் வழியாக பக்கத்து மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. ஆனால், மாவட்ட மக்களுக்கு கனிமங்கள் கிடைப்பதில்லை. மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகளுக்கு கல், மண் கிடைக்கவில்லை. இதனால், அந்தப் பணிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் முடக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, சாலைப் பணிக்கு ரூ. 1,046 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதில், சாலைப் பணி மேற்கொண்ட நிறுவனத்துக்கு நஷ்ட ஈடாக ரூ. 350 கோடி வழங்கப்பட்டுள்ளது. தோ்தல் பத்திர விவகாரத்தில் பாஜக எதையும் மறைக்கவில்லை என்றாா்அவா். எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, மாவட்ட பாஜக தலைவா் சி. தா்மராஜ், மாநிலச் செயலா் மீனாதேவ், மாநில மகளிரணிச் செயலா் உமாரதிராஜன், மாவட்டப் பொருளாளா் முத்துராமன், துணைத் தலைவா் எஸ்.பி. தேவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.