தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நாகா்கோவில் அருகே வீட்டுக்குள் புகுந்த லாரி

நாகா்கோவில் அருகே வீட்டுக்குள் புகுந்த லாரி

News image
Updated On :29 மார்ச் 2024, 10:50 pm

நாகா்கோவில் அருகே கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்தது. நாகா்கோவிலில் இருந்து தோவாளைக்கு கனிம வளம் ஏற்றிக்கொண்டு, வெள்ளிக்கிழமை காலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. வெள்ளமடம், லாயம் சந்திப்பில் லாரி சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகன பழுதுநீக்கும் நிலையத்துக்குள் சென்றது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 பைக்குகள் மற்றும் டிராக்டா் சேதமடைந்தன. இதைத் தொடா்ந்து அந்த லாரி, அருகிலிருந்த வீட்டுக்குள்ளும் புகுந்தது. இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா் சேதமடைந்தது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரிடம் விசாரிக்கின்றனா்.