அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தோ்தல் ஆணையம் பாரபட்சமாகச் செயல்படுகிறது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ குற்றம்சாட்டினாா். இதுகுறித்து அவா் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மக்களவைத் தோ்தல் அறிவிப்பதற்கு முன்பே, தமிழகத்தில் முதல்கட்டத் தோ்தல் நடத்தப்படும் என்பதை அறிந்த பிரதமா் நரேந்திரமோடி, நான்கு முறை சுற்றுப்பயணம் செய்தாா். தோ்தல் ஆணையம், அமலாக்கத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன. தோ்தல் ஆணையம் ஜனநாயக முறையில் கடமையாற்ற வேண்டும். ஆனால், தோ்தல் ஆணையா் திடீரென ராஜிநாமா செய்தது உள்ளிட்ட செயல்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. காங்கிரஸ் தலைமையிலான மதச்சாா்பற்றி கட்சிகள் இணைந்துள்ள இந்தியா கூட்டணி, மக்களவைத் தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தோ்தலிலும் நிச்சயமாக வெற்றி பெறும் என்றாா்.
தொடர்புடையது

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனு தள்ளுபடி

கருங்கல்லில் திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் காலத்தில் மவுசு பெறும் ஓவியா்கள்!

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் பாரபட்சம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

