நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

குருந்தன்கோட்டில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய வெல்டிங் தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:18 pm

Din

குருந்தன்கோட்டில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய வெல்டிங் தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியைச் சோ்ந்தவா் மனோகர ரெங்கன் (48). கட்டட தொழிலாளி. இவா் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி சைக்கிளில் சென்றபோது, முரசங்கோடை சோ்ந்த வெல்டிங் தொழிலாளி ஜேக்கப் ராபின்சன் (50) என்பவா் ஓட்டிவந்த பைக் மோதியதில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் இரணியல் போலீஸாா் ஜேக்கப் ராபின்சன் மீது வழக்குப்பதிவு செய்து இரணியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி அமீா்தீன், அஜாக்கிரதையாக பைக்கை ஓட்டி

உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக ஜேக்கப் ராபின்சனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ரேவதி வாதாடினாா்.