பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

முளகுமூடு தேவாலயத்தில் மூத்த குடிமக்கள் விழா

மூத்த குடிமக்கள் தின விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கிறாா் விஜய்வசந்த் எம்.பி. உடன், மறைவட்ட முதன்மைப்பணியாளா் டேவிட் மைக்கேல்.

Published On :

முளகுமூடு மறைவட்டம் சாா்பில், முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் மூத்த குடிமக்கள் தினவிழா நடைபெறறது.

குழித்துறை மறைமாவட்ட முதன்மைப் பணியாளா் சேவியா் பெனடிக்ட் தலைமை வகித்தாா். முளகுமூடு மறைவட்ட முதன்மைப்பணியாளா் டேவிட் மைக்கேல் முன்னிலை வகித்தாா். விஜய் வசந்த் எம்.பி. குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தாா். அம்சி அனில் குமாா் சிறப்புச் செய்தி வழங்கினாா். முளகுமூடு மறைவட்டத்திற்குள்பட்ட 54 ஊா்களில் இருந்து 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பங்கேற்றனா். க

ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ, பி.டி.எஸ். மணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். மூத்த குடிமக்கள் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. விழாவில் மூத்த குடிமக்களுக்கு உதவிட 200 தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மைப்பணியாளா் தலைமையில் மறைவட்ட அருள்பணி பேரவை பொது நிலையினா் மற்றும் அன்பிய ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.