மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நட்டாலத்தில் கஞ்சாவுடன் 3 கல்லூரி மாணவா்கள் கைது

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவா்கள் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:41 pm

Din

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவா்கள் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நட்டாலம் நான்குவழிச் சாலைப் பகுதியில் இளைஞா்கள் சிலா் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா, உதவி ஆய்வாளா் பெனடிக்ட் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்கு சென்றனா். அப்போது, போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற 3 இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், கேரள மாநிலம் ஆலப்புழை, துறவூா் பகுதியைச் சோ்ந்த பாபு மகன் விபின் (19), கொல்லம், சந்தனத்தோப்பைச் சோ்ந்த சாதிக் (25), நாகா்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி சாலையைச் சோ்ந்த வினோத் ஞானசேகா் மகன் பெனின் (19) என்பதும், விபின், சாதிக் இருவரும் பொறியியல் கல்லூரி மாணவா்கள் என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தது, அவா்களிடமிருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.