புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மாா்த்தாண்டம் அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது

மாா்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 3 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட மினி டெம்போ.

Updated On :16 அக்டோபர் 2024, 10:58 pm

Din

மாா்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 3 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சதீஷ் நாராயணன் தலைமையிலான போலீஸாா் பயணம் பகுதியில் வாகன சோதனை நடத்தினா். சந்தேகத்துக்கிடமாக வந்த மினிடெம்போவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், 3 டன் ரேஷன் அரிசி கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஓட்டுநரான மேலப்பெருவிளை மிக்கேல் மகன் ஜெனின் (34) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா்; ரேஷன் அரிசியுடன் மினி டெம்போவை போலீஸாா் பறிமுதல் செய்து, மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, விசாரணை நடைபெறுகிறது.