நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பூதப்பாண்டியில் 2 புதிய ரேஷன் கடைக் கட்டடங்கள் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் ரூ. 27 லட்சத்தில் கட்டப்பட்ட 2 புதிய ரேஷன் கடைக் கட்டடங்கள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

ரேஷன் கடையைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றிய தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

Updated On :4 செப்டம்பர் 2024, 8:55 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் ரூ. 27 லட்சத்தில் கட்டப்பட்ட 2 புதிய ரேஷன் கடைக் கட்டடங்கள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட இக்கட்டடங்களை எம்எல்ஏ என். தளவாய்சுந்தரம் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

பூதப்பாண்டி பேரூராட்சி உறுப்பினா் உஷாபகவதி, செயல் அலுவலா் சந்தோஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தினி பகவதியப்பன், பூதப்பாண்டி பேரூராட்சி துணைத் தலைவா் அனில்குமாா், அதிமுக ஒன்றியச் செயலா்கள் பொன். சுந்தா்நாத் (தோவாளை வடக்கு), முத்துக்குமாா் (தோவாளைதெற்கு), பூதப்பாண்டி பேரூா் செயலா் எபிஜான்சன் உள்ளிட்டோா் பேசினா்.

திட்டுவிளை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கச் செயலா் ராஜேஷ் வரவேற்றாா். தேவாளை வடக்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்கச் செயலா் அன்னை ஏசுதாஸ் நன்றி கூறினாா்.