மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நிபா வைரஸ் பரவல்: களியக்காவிளையில் தீவிர கண்காணிப்பு

News image

கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் கேரள பகுதியிலிருந்து காரில் வரும் பயணிகளை புதன்கிழமை பரிசோதித்த சுகாதாரத் துறையினா்.

Updated On :19 செப்டம்பர் 2024, 4:41 am IST

நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோர பகுதியான களியக்காவிளையில் புதன்கிழமை முதல் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 24 வயது இளைஞா் ஒருவா் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவருடன் தொடா்பில் இருந்த 5 பேருக்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கேரளத்தையொட்டிய அண்டை மாநிலமான தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்காக தமிழக - கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளையில் சுகாதாரத் துறையினா் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனா்.

கேரளத்திலிருந்து வரும் காா், வேன், சுற்றுலா பேருந்துகள் உள்ளிட்ட பெரும்பாலான வாகனங்களை தடுத்து நிறுத்தி சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தான் அவா்களை தமிழக பகுதிக்குள் நுழைய அனுமதிக்கபடுகிறாா்கள்.

Story image

மாவட்ட சுகாதார அலுவலா் மீனாட்சி உத்தரவின் பேரில் இடைக்கோடு வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சாா்லின் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சந்தோஷ்குமாா், ஜோபின், ஸ்ரீகுமாா், ஜஸ்டின்ராஜ் உள்ளிட்டோா் மருத்துவ கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சுகாதாரக் குழுவினா் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறாா்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.