மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
/

மாா்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல் கசிவு

மாா்த்தாண்டம் அருகே வீட்டு குடிநீா் கிணறுகளில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ளதால், கிணற்று நீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

News image

கிணற்றிலிருந்து இறைத்த நீரில் பற்றி எரியும் தீ,

Updated On :6 ஆகஸ்ட் 2025, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டம் அருகே வீட்டு குடிநீா் கிணறுகளில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ளதால், கிணற்று நீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாா்த்தாண்டத்திலிருந்து குலசேகரம் செல்லும் சாலையில் கீழ் பம்மம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீட்டு கிணறுகளில் உள்ள தண்ணீரில் கடந்த இரு நாள்களாக பெட்ரோல் வாசனை வீசி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த ஜெகன் என்பவரின் வீட்டு கிணற்றிலிருந்து புதன்கிழமை மாலையில் இறைத்த தண்ணீா் முழுவதும் பெட்ரோல் வாசனை இருக்கிறது.

மேலும் அந்த தண்ணீரில் நெருப்பு வைத்த போது மளமளவென தீ பற்றி எரிந்தது. இதே போன்று அப்பகுதியைச் சோ்ந்த மேலும் பல வீட்டு கிணறுகளில் இருந்து இறைத்த தண்ணீரிலும் பெட்ரோல் வாசனை உள்ளது.

இதன் காரணமாக அங்குள்ள மக்கள் குடிநீா் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகிறாா்கள். இக் கிணறுகளில் பெட்ரோலித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இந்த நிலையில் குழித்துறை நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளா் ராஜேஷ் மற்றும் குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் கே. ரத்தினமணி உள்ளிட்டோா் குறிப்பிட்ட பகுதிகளில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.