அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குழித்துறையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

News image
~
Updated On :3 டிசம்பர் 2025, 8:37 pm

Syndication

குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மாா்த்தாண்டம் மறை மாவட்ட செயலரும், மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி தாளாளருமான பிராங்கிளின் ஜோஸ் தலைமை வகித்தாா். சிறப்புப் பள்ளி தாளாளா் அருள்தந்தை அஜீஷ்குமாா் அறிமுக உரையாற்றி, வரவேற்றாா்.

மாா்த்தாண்டன்துறை புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் செல்வதாஸ், குழித்துறை வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் கே. முத்துகிருஷ்ணன், பாப்புலா் மோட்டாா்ஸ் நிறுவனா் பிபின் பாபு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற சாா்பு நீதிபதிகள் ஏ. சுந்தரி (குழித்துறை), கே. மாரியப்பன் (பத்மநாபபுரம்) ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாற்றுத்திறன் மாணவா்களின் மாறுவேடப் போட்டி, அணிவகுப்பு நடைபெற்றது. குழித்துறை ஸ்ரீ தேவிகுமரி மகளிா் கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் நாராயணி நடுவராக செயல்பட்டாா்.

வெற்றி பெற்ற மாணவா், மாணவியருக்கு சாா்பு நீதிபதிகள் பரிசுகள் வழங்கினா். சிறப்புப் பள்ளி தலைமையாசிரியா் எம். டென்னிஸ் நன்றி கூறினாா்.

Story image