மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மண்ணெண்ணெய் கடத்த முயற்சி: ஒருவா் கைது

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:36 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,925 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள பூத்துறை மீனவக் கிராமத்திலிருந்து படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் காரில் கொல்லங்கோடு பகுதி வழியாக கேரளத்துக்கு கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபகுமாா் தலைமையிலான போலீஸாா் நீரோடி மீனவக் கிராமத்தில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 55 கேன்களில் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காருடன் அதிலிருந்த 1,925 லிட்டா் மானியவிலை மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்து, ஓட்டுநா் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியைச் சோ்ந்த லாலு (31) என்பவரை கைது செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.