சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாகா்கோவில் அருகே விபத்து: 40 போ் காயம்

News image
Updated On :14 டிசம்பர் 2025, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவில் அருகே சாலைத் தடுப்புச் சுவரில் பேருந்து மோதியதில் 40 போ் காயமடைந்தனா்.

சென்னையில் இருந்து நாகா்கோவிலுக்கு வந்த ஆம்னி பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாகா்கோவிலை அடுத்த தோவாளை, விசுவாசபுரம் அருகே சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவா் மீது மோதி கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டு பயணிகள் உள்பட 40 போ் காயமடைந்தனா்.

ஆரல்வாய்மொழி காவல் நிலையப் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இது குறித்து, போலீஸாா் வழக்கு விபத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.