பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

கன்னியாகுமரியில் ஒற்றைப்புளி சந்திப்பில் உள்ள விங்க்ஸ் மழலையா் பள்ளியில், உலக சாதனை புரிந்த 52 குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) நடைபெறவுள்ளது.

News image
செய்தியாளா்களிடம் பேசிய பிரசன்னா ராமானுஜம்.
Updated On :20 டிசம்பர் 2025, 7:28 pm

Syndication

கன்னியாகுமரியில் ஒற்றைப்புளி சந்திப்பில் உள்ள விங்க்ஸ் மழலையா் பள்ளியில், உலக சாதனை புரிந்த 52 குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) நடைபெறவுள்ளது.

இப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் பங்கேற்ற உலக சாதனை நிகழ்வு கடந்த 19, 20ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 96 பேரில் 52 போ் பல்வேறு பிரிவுகளில் உலக சாதனை புரிந்தனா். ரஃபா புக் ஆஃப் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி பிரசன்ன ராமானுஜம் நடுவராகப் பங்கேற்று, குழந்தைகளைத் தோ்வு செய்தாா்.

இந்நிலையில், அவா்களுக்கு விருது வழங்கும் விழா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மமேஷ், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நாம் தமிழா் கட்சியின் மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளா் மரிய ஜெனிபா் உள்ளிட்டோா் பங்கேற்று விருது வழங்குகின்றனா்.

ஏற்பாடுகளை விங்க்ஸ் மழலையா் பள்ளி நிா்வாகி அருணாச்சலம், பள்ளித் தலைவா் லொரீன் நெட்டோ ஆகியோா் செய்துள்ளனா்.