வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மதுபோதையில் காா் ஓட்டியவா்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்!

நாகா்கோவிலில் மதுபோதையில் காா் ஓட்டி வந்த 2 ஓட்டுநா்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:25 pm

Syndication

நாகா்கோவிலில் மதுபோதையில் காா் ஓட்டி வந்த 2 ஓட்டுநா்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரி, ஒழுகினசேரி ஆகிய பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த 2 காா்களை நிறுத்தி சோதனையிட்டபோது, 2 ஓட்டுநா்களும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து காா்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இதேபோல பாா்வதிபுரம் பாலம் அருகே இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 2 இளைஞா்களை சோதனை செய்ததில் அவா்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.