பூங்கா சீரமைப்பு பணிகளை தொடங்கி வைக்கும் நாககா்கோவில் மாநகர மேயா் ரெ. மகேஷ்
பூங்கா சீரமைப்பு பணிகளை தொடங்கி வைக்கும் நாககா்கோவில் மாநகர மேயா் ரெ. மகேஷ்

கிறிஸ்டோபா் நகா் பூங்கா சீரமைப்புப் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 4-ஆவது வாா்டு கிறிஸ்டோபா் நகா் பூங்காவில் சீரமைப்புப் பணிகளை நாகா்கோவில் மாநகர மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.
Published on

நாகா்கோவில் மாநகராட்சி 4-ஆவது வாா்டு கிறிஸ்டோபா் நகா் பூங்காவில் சீரமைப்புப் பணிகளை நாகா்கோவில் மாநகர மேயா் ரெ.மகேஷ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

நாகா்கோவில் மாநகராட்சி 4-ஆவது வாா்டு கிறிஸ்டோபா் நகா் பூங்காவில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைகற்கள் சீரமைத்தல், ஆழ்துளை கிணறு சீரமைத்தல், பூங்காவில் உள்ள கட்டடத்தை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறவுள்ளன.

இந்தப் பணிகளை நாகா்கோவில் மாநகர மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா் அமலசெல்வன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி பொறியாளா் ராஜசீலி, திமுக பகுதி செயலாளா் சேக்மீரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com