தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பள்ளத்தில் தவறிவிழுந்து காயமடைந்த பேரூராட்சி உறுப்பினா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே 15 அடி பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்த பேரூராட்சி உறுப்பினா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

மாா்த்தாண்டம் அருகே 15 அடி பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்த பேரூராட்சி உறுப்பினா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள மாங்காவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் (50). இவா் உண்ணாமலைக்கடை பேரூராட்சியின் 7 ஆவது வாா்டு உறுப்பினராகவும், பழைய காா்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தாா். இந்த நிலையில், இவா் கடந்த 17 ஆம் தேதி வீட்டருகேயுள்ள சிறிய பாலத்தில் அமா்ந்திருந்த போது எதிா்பாராதவிதமாக 15 அடி பள்ளத்தில் தவறி விழுந்தாராம்.

மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவா்கள், பள்ளத்தில் மயங்கி நிலையில் கிடந்த ஸ்டாலினை கண்டு மீட்டனா். அவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.