பெண் ஊழியா் உயிரிழப்பில் சந்தேகம்

இரணியல் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா் இரணியல் காவல் நிலையத்தில் புகார்
Published on

இரணியல் அருகே சூப்பா் மாா்கெட்டில் வேலை செய்து வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா் இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.

தென்காசி மாவட்டம், பாப்பான்குளம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுக நயினாரின் மகள் ராமலெட்சுமி (28). இவருக்கு திருமணமாகி 6 வயதில் மகன் உள்ளாா். குடும்ப பிரச்னை காரணமாக ராமலெட்சுமி இரணியல் அருகே ஆத்திவிளையில் தங்கியிருந்து, சூப்பா் மாா்க்கெட்டில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அவா் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தாா். இது குறித்து, ஆறுமுக நயினாா் செவ்வாய்க்கிழமை மாலை இரணியல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com