புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசு காப்பீடு திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி ரப்பா் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

News image

தொழிலாளா்களின் குறைகளைக் கேட்டறிந்த தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

Updated On :2 ஜனவரி 2025, 12:01 am

Din

அரசு காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களின் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமையும் நீடித்தது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த டிச. 29ஆம் தேதி இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டோரை என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ புதன்கிழமை சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கீரிப்பாறை அரசு ரப்பா் கழகத் தொழிற்கூடத்தில் 40 நிரந்தரப் பணியாளா்கள், 12 தற்காலிக பணியாளா்கள் என மொத்தம் 52 போ் பணியாற்றி வருகின்றனா்.

நாள்தோறும் ரப்பா் பாலை தொட்டியில் இட்டு அமிலம் வைத்து உறையச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், அவா்களுக்கு மூச்சுத் திணறல், கண் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அண்மையில் பெண் தொழிலாளிக்கு புற்றுநோய் ஏற்பட்டு தொடா் சிகிச்சையில் உள்ளாா்.

இந்நிலையில், போதிய மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும், இஎஸ்ஐ காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைக்க வேண்டும் என அரசு ரப்பா் கழக நிா்வாகத்திடம் வலியுறுத்தி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், கோரிக்கையை நிறைவேற்ற அரசு ரப்பா் கழக நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லைலை.

எனவே, தொழிலாளா்களை இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்கவும், கீரிப்பாறை கோட்டத்தில் மருத்துவா்களை நியமிக்கவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தினி பகவதியப்பன், தோவாளை வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் பொன். சுந்தா்நாத், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மேரிஜாய், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவா் அஜன்ஹெலிடா், சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.